Corona Virus
- May 5, 2020
- 1 min read
கொரோனாவின் கொடுமைகள் - சுவி. பாபு T தாமஸ்
கொரோனா நீ யாரண்ணா
உன் பேரை கேட்டால் உலகம் அதிருது
நெஞ்சம் பதறுது ! உறவுகள் ஓடுது
மரணமே உன் காலடியில்
தான், தவம் இருக்குது.
துக்கம் இது துவக்கம்
காலம் அது கொடுமை என்பதா !
கொரோனா உன் வரவே சரி என்பதா ?
கூடுவது கூடாது, சொல்லுது சட்டம்
கூட்டமா அது கூடவே கூடாது
என்றார் மொத்தம்.
ஓட்டம் நின்றது ! ஆட்டம் ஒய்ந்தது
உலகம் சுழலுது, மனிதன் சுருண்டான்.
அடைபட்டுக் கிடக்குது
மனித இனம். சாத்தியமில்லாததை
சாதிப்பது கொரோனாவின்
குணம் . ஆயிரம் இருந்தென்ன
ஆறுதலுக்கு ஆளில்லை
அருகில் வர நாதியில்லை.
வருவதும் போவதும்
உலகம் வகுத்த நியதி, ஆனால்
உடனே போக சொல்லுது
கொரோனாவின் விதி!
சுவி. பாபு T தாமஸ் , நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்,
இராணிப்பேட்டை .


















Comments